![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/ops-fasting45-1665633375.jpg)
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பிறகு பாஜகவுடன் கூட்டணி கொண்ட ஓபிஎஸ் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் இருந்ததால் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு முக்கிய பதவியை வழங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது அவர் பாஜகவினரை ஒதுக்கியது புது பிரச்சனைக்கு வலுவகத்துள்ளது. இப்போவே இப்படி என்றால் தேர்தல் முடிவுக்கு பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவருக்கு கடிவாளம் போட வேண்டும் என பாஜகவினர் குமுறுகின்றனாராம்.