ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு டி20 உலக கோப்பை போட்டி ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இடம்பெற தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டியில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதைப் பொறுத்துதான் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 28ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் வீரர் இர்பான் பதானும் டி20 போட்டியில் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அதன்படி கில் அல்லது சஞ்சு சாம்சன், ரவி பிஷ்னோய் அல்லது சாகல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரா குல்தீப் யாதவ், பும்ரா, ஜடேஜா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, துபே, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், விராட் கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர்களின் பெயரை அவர் கூறியுள்ளார்.