சமீபகாலமாகவே தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறதுபி. பெண் குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டது ஒரு சமூகத்துக்கான பிரச்னை என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “சிறுமியை கொன்று சாக்கடையில் வீசியது பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த சம்பவம் என்னை தொந்தரவு செய்துவிட்டது. போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.