திருநெல்வேலியில் தான் உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது, ​​ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்ரமணியன் என்பவரின் 7 வயது மகளான சேவிதா பகவதி என்ற சிறுமி, தான் சிறுக சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது சிறுமிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.