தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமாரன் இயக்கியிருந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை nettex நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக புஷ்பா படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 275 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு புஷ்பா 2 படத்தின் இந்தி மொழி உரிமையை தயாரிப்பாளர் அனில் தடானி வாங்கியுள்ளார். இவர் சுமார் 200 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில் பாலிவுட்டில் மட்டும் இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.