தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் அதிக அளவில் வெப்பம் இருப்பதால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் மின்சார வாகன பயன்பாடு காரணமாகவும் மின் தேவை அதிகரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக 19,500 மெகாவாட் மின் தேவை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.