சென்னை தண்டையார்பேட்டை IOC எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அப்போது பாய்லர் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த பெருமாள் மற்றும் இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெருமாள் உயிரிழந்தார்.