நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் மதுரை வீரன், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக மூன்றாவது மாடியில் ஏறி பேனர் கட்டியிருக்கிறார். அப்போது எதிர்பாராமல் தவறி விழுந்ததில் மதுரை வீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.