நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன் என்று நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய மன்சூர் அலிகான், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.