இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கான லோகோவை ஐசிசி நேற்று வெளியிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு எம்.எஸ் தோனி தலைமையிலான  இந்திய அணி உலக கோப்பையை வென்றதை நினைவு கூறும் விதமாக நேற்று ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான லோகோவை வெளியிட்டது.

2023 உலகக்கோப்பை போட்டியை வழிநடத்துவதை நினைத்து கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த  மகிழ்ச்சியில் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பைக்கான  பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட இருக்கிறார்கள். 2011-ல் உலக கோப்பையை வென்ற இந்தியாவின் வெற்றி நாளை நேற்று ஐசிசி செயலாளர் ஜெய்ஷா நினைவு கூர்ந்தார். மேலும் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு ஐசிசி ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.