ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் 221 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 201 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் யஸ்வேந்திர சாகுல் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா 310 விக்கெட்டுகள், அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.