சென்னை அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள பச்சைகுப்பம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) மற்றும் மே 10-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று காலை 10:45 மணி முதல் மதியம் 2:45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி காட்பாடியிலிருந்து காலை 9:30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில் மற்றும் மறு மார்க்கத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரயில் ஆகிவைகள் ரத்து செய்யப்படும். மேலும் அதன்படி இன்று மற்றும் மே 10-ம் தேதி மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.