திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தும் வகையில் லைசென்ஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தனித் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட மதுபானங்களை விற்கலாம். ஏற்கனவே குடியால் பல குடும்பங்கள் கெட்டு சீரழியும் நிலையில், அரசின் இந்த முடிவு மிகவும் மோசமானது என விமர்சனம் எழுந்துள்ளது.