![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/af6f700c-3b6e-4b28-b11f-f967d80072e6.jpg)
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை உருவாக்கினார். இந்த படத்தை சுந்தர் சி இயக்கி நடித்திருந்த நிலையில் நடிகைகள் ராசி கண்ணா மற்றும் தமன்னா, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/39c0e209-aab2-4110-b763-dcb5d8b28edd-300x180.jpg)
இந்த படம் கடந்த மாதம் வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரண்மனை 4 படம் உலகம் முழுதும் தற்போது 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் இதன்மூலம் 2024 ஆம் ஆண்டில் முதல் 100 கோடி வசூல் சாதனை புரிந்த தமிழ் படம் என்ற பெருமையை அரண்மனை 4 பெற்றுள்ளது.