2024 மகளிர் ஐபிஎல்லுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

மகளிர் பிரீமியர் லீக், அதன் 2வது சீசனை நோக்கி நகர்கிறது. பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசனுக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது. WPL 2024 ஏலத்தில் மொத்தம் 165 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 104 இந்திய வீரர்கள் மற்றும் 61 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். 165 கிரிக்கெட் வீரர்களில், 15 வீரர்கள் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மொத்தம் 56 வீரர்கள் மற்றும் கேப் செய்யப்படாத வீரர்கள் 109. இதில் 5 அணிகளுக்கும் அதிகபட்சமாக 30 வீரர்கள் தேவை, அவற்றில் 9 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

இந்நிலையில் 2024 மகளிர் ஐபிஎல்லுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. மும்பையில் நடந்த மினி ஏலத்தில் கீர்த்தனா பாலகிருஷ்ணனை வாங்கியது மும்பை அணி. ஆல்-ரவுண்டர் கீர்த்தனா பாலகிருஷ்ணன் மும்பை இந்தியன்ஸ் அணியால் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். தமிழக அணிக்காக விளையாடும் வீராங்கனை முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில், அன்புள்ள கீர்த்தனா பாலகிருஷ்ணன், ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் உணர்ச்சிக்கும் ஒரு மலர் இருப்பதை அவள் அறிவாள், ஆனால் நீங்கள் வீட்டிற்கு வருவதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதைச் சொல்லும் அளவுக்கு அவளிடம் இல்லை என்று நாங்கள் உணர்கிறோம். மும்பைக்கு வரவேற்கிறோம், #OneFamilyக்கு வரவேற்கிறோம்” என பதிவிட்டுள்ளது.