லோகேஷ் கனகராஜ் இயக்கி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரக்கூடிய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா விழா இன்று மாலை பெரிய மேடுவில் இருக்கக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த வெற்றி விழாவை நேரில் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மதியம் ஒரு மணி முதலே நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர்.

விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போது ஆடியோ லாஞ்ச் விழாவில் விஜய் சொல்லக்கூடிய குட்டி ஸ்டோரி திரைப்படத்துறையிலும்,  அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும்  அந்த வகையில் இன்று நடைபெறக்கூடிய லியோ வெற்றி விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

எனவே இந்த வெற்றி விழாவை பார்ப்பதற்காக ரசிகர்களும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.   நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக  நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் அனுமதியை பொருத்தவரை மொத்தம் 5 கேட் வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். விஐபி உள்ளே செல்வதற்கு ஒரு வழி, அதேபோல ரசிகர்கள்,  விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்வதற்கு வழி என தனித்தனியாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அனுமதிக்க அவர்களுக்கு கோல்ட், சில்வர், பிளாட்டினம் என பாஸ் என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பாஸ் எடுத்துட்டு வருபவர்களுக்கு,  ரசிகர்கள் விஜய் மக்கள் மன்ற அடையாள அட்டை,  ஆதார் அட்டை என்ற மூன்றையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டடு வெற்றி விழா தொடங்கியது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குட்டி ஸ்டோரியை நடிகர் விஜய் சொன்னார்.

இதில் குட்டி ஸ்டோரி சொன்ன நடிகர் விஜய், ரெண்டு பேரு காட்டுக்குள்ள வேட்டைக்கு போறாங்க. அதுல ஒருத்தர்  வில்லு அம்போடு போனாரு. இன்னொருத்தர் கையில ஈட்டி உடன்  போனாரு.  வில்லு அம்பு உடன் போனவரு ஒரு முயல டார்கெட் பண்ணி அதை வேட்டையாடிடுகிறார்.

இன்னொருத்தர் யானையை குறி வச்சு தனது ஈட்டிய எரியுறாரு. ஆனா அது மிஸ் ஆயிடுச்சு.  இவங்க ரெண்டு பேர்ல யாரு பெரிய ஆளுன்னு நினைக்கிறீங்க ? வில் அம்பை வைத்து முயல கொன்னவங்களா ? இல்ல  ஈட்டியை வைத்து யானையை குறி வச்சவங்களா ?

யானைக்கு குறி வைத்தவர்  தான் மிகப்பெரிய ஆளு.  ஏன்னா நம்மளால எது ஈசியா முடியுதோ, அதை பண்றது வெற்றி இல்லை. நம்மளால எதை பண்ண முடியாதோ, அல்லது எதை பண்றது கஷ்டமா இருக்குதோ,  அதுதான் வெற்றி நண்பா என குட்டி ஸ்டோரி சொல்லி முடித்தார்.