விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த 2ஆம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய இபிஎஸ், 33 மக்களவை தொகுதிகளில் நேரடியாக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தார். அதே போல், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவித்தார்.

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.