டெல்லியை சேர்ந்த பப்ளி குமாரி என்ற 20 வயது பெண் ரக்ஷா பந்தனை முன்னிட்டு தனது அண்ணனை பார்க்க பஞ்சாபில் இருக்கும் லூதியானா பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் பப்ளி குமாரிக்கு உடல் நல கோராறு ஏற்பட்டு வாந்தி எடுப்பதற்காக ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி உள்ளார்.

அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பப்ளி குமாரியின் தலையில் மோதியுள்ளது. இதில் அந்த பெண் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரக்ஷா பந்தனுக்கு அண்ணனை பார்க்க சென்ற தங்கைக்கு ஏற்பட்ட இந்த நிலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.