லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். பிரதமரை எப்பொழுதும் ராமர் கோயில் பற்றி பெருமையாக பேசுவதாக கூறிய லாலு பிரசாத் யாதவ் மோடி ஒரு இந்துவே இல்லை என்று கூறினார். இந்து மதத்தைச் சேர்ந்த ஆண் அவர்களுடைய பெற்றோர் மறைந்தால் தாடி தலைமுடி முழுவதும் சவரம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அவர்களோ அவருடைய தாயாரின் மறைவின் போதும் தாடி மற்றும் தலை முடியை எடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும் பிரதமர் மோடி குடும்ப அரசியல் குறித்து பேசுவதையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார் . அதாவது பிரதமர் கூட ரொம்ப  வாரிசு அரசியல் குறித்து பேசுகிறார் . தனக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்பதை அவர் விளக்க வேண்டும் என்று எல்லை மீறி விமர்சித்து இருந்தார். இந்நிலையில்

இதற்கு பாஜகவினர் நாங்கள் மோடி குடும்பம் என தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பதிவில், “அன்புள்ள தலைவரே… மணிப்பூர் மக்கள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள்… உங்கள் “குடும்பத்தின்” ஒரு பகுதியாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.