சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவருகிறார். அப்போது, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல பெண்களுக்கு 1000 திட்டம் இன்னும் 5 மாதங்களில் தொடங்கப்படும் என்று உதயநிதி உறுதியளித்தார். எப்போது 1000 என்று தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்த எதிர்கட்சியினருக்கு பதிலளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார்.