உலக ஆஸ்டியோபோராசிஸ் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அமைதியான எலும்பு நோய் எந்த அறிகுறிகளையும் காட்டாது. ஏனென்றால் இது படிப்படியாக எலும்புகளை நுண்துளைகள் மற்றும் சேதத்திற்கு ஆளாக்கும். இது திடீரென்று அல்லது எதிர்பாராத எலும்பு முறிவின் மூலமாக உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அமைதியான எலும்பு நோய் எந்த அறிகுறிகளையும் எப்போதும் காட்டாது.

இந்த நோய் பெரும்பாலும் வயதிற்கு ஏற்ப நிகழ்கின்றது. ஹார்மோனின் அளவு குறைவதால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் பெண்களுக்கு இது மிகவும் பொதுவான நிலையாகும். இதனைத் தவிர புகைப்பிடித்தல், மது அருந்துதல், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, செயலற்ற வாழ்க்கை முறை ஆகியவையால் ஏற்படக்கூடியது. இந்தியாவில் சுமார் 50 மில்லியன் மக்கள் சில வகையான ஆஸ்டியோ போரோசிஸ் நோயை கொண்டுள்ளனர். அதேசமயம் மாதவிடாய் நின்ற பெண்களின் அதிக பாதிப்பு உள்ளது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 20ஆம் தேதி உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் அனுசரிக்கப்படுகின்றது.