பழைய ஓய்வூதியம், புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 6ம் தேதி பேருந்து ஓடாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பொங்கலுக்கு பின் கோரிக்கை குறித்து தீர்வு காணப்படும் எனவும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.