பாரத் என்ற பிராண்ட் பெயரில் ₹25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்து ₹100 வரை சென்றது. இதனால், ஏழை நடுத்தர மக்கள் அரிசியை வாங்க முடியாத சூழல் உருவானதால், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தையிடல் கூட்டமைப்பு, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் ₹25க்கு அரிசியை விற்பனை செய்யவுள்ளது.