நாட்டின் மூத்த குடிமக்கள் இந்த நான்கு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் இப்போது நீங்கள் நிலையான வைப்பு தொகைக்கு அதிக வட்டியின் பலனை பெற முடியும். அதாவது உங்கள் கணக்கில் அதிக வட்டி பணம் சம்பாதிப்பீர்கள். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகிய வங்கிகள் அதிக வட்டி தருகின்றன.

எஸ்பிஐ வங்கி மூத்த குடி மக்களுக்கு 7.50 சதவீதம் வட்டியை வழங்குகின்றது. எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிலையான வைப்பு வசதியை வழங்குகிறது. மேலும் ஐசிஐசிஐ வங்கியும் 7.5% வட்டியை வழங்குவதாக அறிவித்துள்ளது.