தமிழகத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் 4000 ரூபாய் வீதம், 4 வருடங்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வு நடப்பு கல்வி ஆண்டில் வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 750 பள்ளிகளில் இருந்து 11,385 வேறு விண்ணப்பித்துள்ளனர்