‘பத்து தல’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் 48வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், புதிய இசையமைப்பாளர் ஒருவரை களமிறக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, கன்னட திரையுலகின் மூலம் பிரபலமான ‘கேஜிஎப்’ புகழ் ரவி பஸ்ரூர் சிம்பு படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழில் வரலட்சுமி நடித்துள்ள ‘சிங்கப்பார்வை’ என்ற படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.