தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது‌. அதன்படி சாலைகளில் மின்கம்பம் அமைக்கும் போது வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பத்தை அமைக்காமல் சற்று தள்ளி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில், பழுதான மின்கம்பங்களை உடனே அகற்றுவதோடு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு அகற்றப்பட்ட பழைய மின் கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு வேகத்தடைக்கு அருகே வைக்காமல் சற்று தள்ளி வைக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் இடம்  மாற்றுவது தொடர்பாக அதிகாரிகள் உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.