உத்திரபிரதேச மாநிலம் பிஜ்ஜனூர் பகுதியில் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மெஹரினுக்கு மது குடிக்கும் பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கம் இருந்தது மன்னனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தன்னுடைய மனைவியை மன்னன் பலமுறை கண்டித்த போதிலும் அவர் கேட்கவில்லை.  இந்நிலையில் தன்னுடைய கணவனுக்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்து அவருடைய கை கால்களை மெஹரின் கட்டி போட்டுள்ளார்.

அதன்பிறகு அவருடைய ஆணுறுப்பை கத்தியால் காயப்படுத்தியும் சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்தியுள்ளார். இது குறித்து மன்னன் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்று கூறிய நிலையில் அவருடைய மனைவி பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த மன்னன் தன் மனைவி துன்புறுத்திய சிசிடிவி கேமரா காட்சியை கடந்த மாதம் 29ஆம் தேதி காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மெஹரினை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.