தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கு மாதங்களில் வாடகத்தை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.

தற்போது இருவரும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடிக்கடி தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த வருடம் தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகையை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vignesh Shivan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wikkiofficial)