இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் தோட்டத்தில் நின்று நடனம் ஆடுகிறார். அவரை சுற்றி 2 குதிரைகள் புல் மேய்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அப்பெண் நடனம் ஆடுவதை பார்த்த ஒரு குதிரை திடீரென ஓடி வந்து அதன் பின்புற கால்களைக் கொண்டு எட்டி உதைத்தது.

இதில் அவர் லேசான காயங்களுடன் தப்பி ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.