
சிரியாவில் 20 வயதான இளைஞர் ஒருவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மூக்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை அவர் கவனிக்காமல் சாதாரண சளி என்று எண்ணி விட்டுள்ளார். ஆனால் மூளை கசிவு தான் உண்மையான காரணம் என்று பின்னர் தெரியவந்தது. இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சைக்கு மறுத்துவிட்டார். அதன்பின் அவருக்கு தலைவலி மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனை முதலில் அவர் சளியின் அறிகுறி என்று நினைத்தார். இதைத்தொடர்ந்து மூக்கில் இருந்து ரத்தப்போக்கு இருந்துள்ளது. உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர் MRI செய்து பார்த்தபோது மண்டை உடைந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு நோய் தொற்று மூளைக்காய்ச்சல் எலும்பு முறிவு மூலம் கசிவதையும் கண்டறிந்தார். எலும்பு முறிவை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதற்கு, அந்த இளைஞன் மறுத்துவிட்டார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி முழுமையாக குணமடைந்து இரண்டு நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்