திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என 7 1/2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை பறித்த ராஜன் என்பவரை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ.5 லட்சம் கொடுங்க... விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!
ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…
Read more“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…
Read more