விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியநல்லூர் கிராமத்தில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணதாசனுக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் காணாமல் போன அர்ச்சனாவை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கண்ணதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அர்ச்சனாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.