இந்தூர் துவாரகாபுரி பகுதியில் 17 வயது மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தூர் துவாரகாபுரி பகுதியில் அர்ஜுன் என்னும் மாணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 12 ம் வகுப்பு படித்து வரும் இவர் ராம் நவமி அன்று தனது பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடினார். இவருடைய தாய் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை தனது தாய்க்கு உதவி செய்து இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் திடீரென அர்ஜுனுக்கு மார்பில் பயங்கரமான வலி ஏற்பட்டுள்ளது. உடனே மாணவனை அவருடைய தாய் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.