ஒருவரின் கீழ் வேலை பார்ப்பதை இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்புவதில்லை. தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டி அதன் மூலம் சம்பாதிக்க விரும்புகின்றனர். யாரிடமும் வேலைக்கு செல்லாமல் தனது திறமையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார் ஒருவர். ஜப்பானில் ஒசாகா பகுதியில் வசித்து வரும் கவாமுரா (38) என்பவர் தனது சிறுவயதில் இருந்தே வீடுகள் மற்றும் கட்டுமான தொழில்களில் ஆர்வம் உடையவராக இருந்து வந்துள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை பயின்று கொண்டிருக்கும்போதே ரியல் எஸ்டேட் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதில் தொடக்கத்தில் தோல்வி அடைந்த இவர் படிப்பை முடித்த பின்னர் வாடகைக்கு வீடு வாங்கிக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்தத் தொழிலில் முதலாளிக்கும் இவருக்கும் இடையேயான பிரச்சனையால் இதனையும் கைவிட்டார். பின்னர் தனது சொந்த முயற்சியில் 10 லட்சம் ரூபாய்க்கு பிளாட் ஒன்றை வாங்கி அதனை ரூபாய் 2 லட்சத்திற்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்து கொண்டிருந்தார். பின்னர் அதனை 24 இலட்சத்திற்கு விற்று உள்ளார். அதன் பின் ஒழுங்காக பராமரிக்கப்படாத பழைய வீடுகளை பராமரித்து அதனை விற்று சம்பாதித்து வருகிறார். இந்தத் தொழிலின் மூலம் கவாமுரா ஒரு ஆண்டிற்கு சுமார் 7.72 லட்சம் கோடி சம்பாதித்து வருவதாக கூறுகிறார்.இதுவரை 200 வீடுகள் வரை வாங்கி விற்றுள்ளார்.

இந்தத் தொழில் குறித்து கவாமுரா கூறியதாவது, இந்தத் தொழிலில் கவனம், பொறுமை மிகவும் அவசியமானது இந்தத் தொழில் மிக நீண்ட கால விளையாட்டு ஆகும் எனக் கூறினார். இவர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இன்றைய தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணமாக செயல்படுகிறார்.