
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுதினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். அதோடு தான் வேண்டிய காரணம் நிறைவேறிவிட்டால் பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருள்களை காணிக்கையாக உண்டியலில் போடுவார்கள்.
தற்போது கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிரம்பியதால், கோவில் நிர்வாகம் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணுவதற்கு ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று கோவில் அலுவலர்கள் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் உண்டியலில் காணிக்கை பணமாக ரூ 91 லட்சத்து 45 ஆயிரம் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 942 கிராமும், வெள்ளை 3 கிலோ 250 கிராமும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தைக் கண்டு பக்தர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.