கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவை ஒட்டிய ஹரலூர் பகுதியில் உள்ள ஒரு சாதாரண 3BHK அபார்ட்மெண்ட் குறித்து ஒருவர் இணையதளத்தில் பதிவிட்ட தகவல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வாடகை விவரத்தில், 1,464 சதுர அடி வீடுக்கு மாதம் ரூ.2.7 லட்சம் வாடகை கேட்கப்படுவதாகவும், அதற்கேற்ற ரூ.15 லட்சம் டிபாசிட் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், “அது வீடா இல்ல ஜிம்பெக்ஸ் வாடகையா?” என்று கலாய்த்து வருகின்றனர். சிலர் நேராக “இந்த டிபாசிட்க்கு ஒரு வீட்டை சுலபமா வாங்கலாம்” எனக் கூற, மற்றவர்கள் “ரூ.15 லட்சம் டிபாசிட்? இது வாடகையா இல்ல ஈஎம்ஐயா?” என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

அந்த வீட்டின் புகைப்படத்தையும் பயனர் பகிர்ந்திருந்தார். அதில் அந்த வீடு ஒன்றும் பிரம்மாண்டமாக இல்லாமல், “சராசரியா தான் இருக்கு, ஆனா விலை மட்டும் அதிகமாக இருக்கு” எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடு பஸ்ஸ்டாப், வங்கிகள், மெட்ரோ உள்ளிட்ட வசதிகளுக்கு அருகிலிருந்தாலும், அந்த விலை நியாயமில்லை என பெரும்பாலானோர் விமர்சித்துள்ளனர்.

பொதுவாக ஹரலூர் பகுதியில் இத்தகைய வீடுகளுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.70,000 வரைதான் வாடகை இருக்கிறது. இருப்பினும்  இந்த விலை, ஹரலூர் வளர்ச்சியடைந்தாலும் இது  ஓவராக இருக்கிறது என அனைவரும் கூறி வருகின்றனர்.