
அமெரிக்காவில் பிறந்த பிரிட்டிஷ் அரசியல்வாதி நான்சி ஆஸ்டர். இவர் 1919 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முதல் பெண்மணி.
இவர் பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான அரசியல்வாதியாக இன்றளவும் பேசப்படுகிறார். கடந்த 1879 இல் பிறந்த இவர் 1964இல் மறைந்தார். இவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பெண்களின் உரிமைகளுக்காகவும், சமூக சீர்திருத்தங்களுக்காகவும் முதலில் குரல் கொடுத்தவர்.
இவர் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவரது கணவர் லார்ட் வால்டோர்ப் நான்சிக்கு ஒரு வைர கிரீடத்தை பரிசாக வழங்கினார். அந்த கிரீடம் இன்றளவும் காண்போரின் கண்ணை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் அந்த கிரீடத்தை ஏலத்திற்கு விடுவதற்காக லண்டன் அருட்காட்சியகம் முடிவு செய்துள்ளது. இதில் அருங்காட்சியகத்தின் பல்வேறு பொருட்களும் ஏலத்துக்கு விடப்பட்டன.
அந்த ஏலத்தில் நான்சி அணிந்திருந்த வைர கிரீடம் சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதாவது லண்டன் அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்பட்ட ஏலத்தில் எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிக விலைக்கு வைர கிரீடம் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.