துருக்கியின் கஸியாண்டெப் மாநிலம் நிசிப் பகுதியில் உள்ள சூரியகாந்தி எண்ணெய் தொழிற்சாலையில், பாதுகாப்பு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெகிர் ஏ (27) என்ற தொழிலாளர், எண்ணெய் டேங்கரின் மேல் மூடியை திறக்க முயன்றபோது, அவரது தனது வாயில் சிகரெட்டுடன் டேங்கருக்குப் அருகே சென்றுள்ளார்.

 

இதையடுத்து, டேங்கரின் மூடி திடீரென வெடித்து, தொழிலாளியின் முகத்தில் நேரடியாகப் பட்டது. வெடிப்புச் சத்தத்துடன் அவர் சில அடிகள் உயரம் பறந்து அருகே தரையில் விழுந்தார். இந்த சம்பவத்தில் பெகிர் ஏ தீவிரமான தீக்காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அருகிலிருந்த மற்றொரு தொழிலாளர் அவரை கவனித்து மீட்டுள்ளார்.

தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனால், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகளை மீறுவதால் ஏற்படக்கூடிய அபாயங்களை நினைவூட்டும் வகையில் பலரும் அதில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நெட்டிசன்கள் எழுந்து வருகின்றனர்.

மேலும், காயமடைந்த தொழிலாளிக்கு வேலை வழங்குநர் மருத்துவ செலவுகளை வழங்க மறுத்துள்ளார் எனவும், “பாதுகாப்பு விதிகளை மீறியதால் அது அவர்களது பொறுப்பல்ல” என கூறப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து, தொழிலாளர்களிடையே பாதுகாப்பு மீது விழிப்புணர்வை வளர்க்கும் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.