விருதுநகர் மாவட்டம் வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதிகளில் ரூ.9.45 லட்சத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அதேபோன்று எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்திற்கு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பெண்கள் மனு அளித்துள்ளனர்.

இன்னும் 3 மாதங்களில், நிதியுதவி பெறாத பெண்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்னும் மூன்று மாதங்களில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த 29ஆம் தேதி அன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ. 21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.