
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை மாதந்தோறும் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில் இந்த மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் 15ஆம் தேதி என்பதால் தற்போது வங்கி கணக்கில் பணம் ஏற்றப்பட்டுள்ளது.
எனவே மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் பணம் ஏறிவிட்டதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளதால் புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களும் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் உட்பட மேலும் சில பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.