
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி கல் வீராம்பாளையத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர் முன்னாள் பலுதூக்கும் வீராங்கனை ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட சாமுண்டீஸ்வரி அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் விஷம் குடித்து சாமுண்டீஸ்வரி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை காப்பாற்றி குடும்பத்தினர் பத்திரமாக பார்த்து கொண்டனர். சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும் சாமுண்டீஸ்வரி விஷம் குடித்து வாயில் நுரை தள்ளுபடி மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமுண்டீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.