தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் அரோம் அருன்ரோஜ் 64 என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் 4 மீட்டர் நீளமுடைய ஒரு பைத்தான் பாம்பு இருந்துள்ளது. அந்தப் பாம்பு, அவரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இறுக்கிக் கொண்டது. மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட அருன்ரோஜ் பாம்பின் தலையை பிடித்து விடுவிக்க முயன்ற போதெல்லாம் அந்த பாம்பு இன்னும் வலிமையாக இறுக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பாம்பு பிடி வீரர்களை அழைத்தனர். சுமார் 20 நிமிடம் கடுமையாக போராடி பாம்பை அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாம்பு தப்பித்து அருகில் உள்ள காட்டிற்குள் சென்றது. இந்நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.