
நாம் தமிழர் கட்சியினரிடம் NIA சோதனை நடத்துவது என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்லாருக்கும் தெரிஞ்ச காரணம்தான். நீங்க இப்படி தான் பார்க்கணும்… நாம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, தொடக்கத்தில் இருந்தே மக்கள் பாதையில், ஜனநாயக வழியில… மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு அரசியல் பேரியக்கம். அவங்க கிட்டயே பதிவு பண்ணி, அவங்க கிட்டயே சின்ன ஒதுக்க சொல்லி போராடுறோம். மக்களோடு நின்னு நம்ம தேர்தலை எதிர்கொள்கிறோம்.
இரண்டாவது கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாமே அரசு மற்றும் காவல்துறை ஒப்புதலோடு தான் அனுமதி பெற்று நடக்கின்றது. சட்டத்திற்கு எதிராக அல்லது சட்ட ஒழுங்கு சீர்கேடுகிற நடவடிக்கைகளோ, செயல்பாடுகளோ இல்ல, எல்லோருக்கும் தெரியும்.
இதுல உளவுத்துறை இருக்கு, காவல்துறை இருக்கு, அதுக்கும் மேல ரா இருக்கிறது. இதெல்லாம் வச்சி நீங்க கண்காணித்துட்டு, திடீர்னு போயிட்டு வீடு வீட்டுக்கு நாங்க NIA சோதிக்கிறோம் அப்படின்னா…. அது அது சும்மா தேர்தல் நேரத்துல சும்மா அச்சுறுத்தி பார்க்கிறதுதான் நியாயமா, வெளிப்படையா ? அவங்க சொல்றத பாருங்க… LTTE-க்கு நீங்க காசு அனுப்பறீங்களா ?
ரொம்ப நாளா எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்தது LTTE-யிடமிருந்து எனக்கு காசு வருதுன்னு, இப்ப LTTE-க்கு நாங்க காசு கொடுக்குறோம்னு கேக்குறீங்க… இப்ப LTTE-க்கு காசு கொடுக்கணும்னா…. எங்க இருக்கு LTTE. LTTEயை அழிச்சு ஒழிச்சாச்சுன்னு நீங்கதான் ஊர் ஊரா போயி சொல்லிக்கிட்டு இருந்தீங்க. அப்புறம் இப்ப வந்து காசு கொடுக்குறீங்களான்னு கேட்குறீங்க. விசாரணை நடத்துபவர் சின்னதா YOUTUBE வச்சி இருக்காங்க … YOUTUBE நடத்தி, காசு திரட்டி, ஒரு இயக்கத்துக்கு காசு கொடுத்துவிட முடியும்ன்னா… வேடிக்கையா இருக்கு என பேசினார்.