
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து ஜனவரி 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாநகர காவல் துறை கமிஷனரிடம் டிசம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் விதிகளின்படி ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சட்டசபையில் தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்று கூறி கவர்னர் ஆர்.என் ரவி வெளியேறினார். இதை கண்டித்து திமுக போராட்டம் நடத்தியது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் வழக்கு தொடர்ந்தார்.
அதில் பாமக 5 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்கும்போது காவல்துறையினர் அதை மறுத்தனர். ஆனால் ஆளுங்கட்சிக்கு மட்டும் சில மணி நேரங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. விதிகளை மீறி அனுமதி வழங்கிய கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் டி ஜி பி க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினரின் அனுமதி இல்லாமல் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. நீதிபதி கூறியதாவது, ஆளுங்கட்சி, எதிர் கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுத்தால் ஒரே மாதிரி மேற்கொள்ள வேண்டும். ஒரு தரப்பிற்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவது, மற்றவர் கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போடுவது என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாது. ஏதாவது அசம்பாவிதம் நடத்தால் காவல்துறையினர் தான் பதில் சொல்ல வேண்டும் அவர்களை தான் குறை கூறுவர். போராட்டத்துக்கு அனுமதி கூறும் விண்ணப்பத்தை குறித்த காலத்துக்குள் பரிசீலத்தை முடிவு செலுத்த வேண்டும். பின்னர் பாமக தொடர்ந்த வழக்கிற்கு வருகிற 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். விசாரணையை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தால்ர். மேலும் அன்றைய தினம் இம்மனும் மீது விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.