இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் ஆகிய போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார். ஆனால் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதே நேரத்தில் தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் விளையாடுவதாகவும் கூறினார்.

அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் வேகப்பந்து பேச்சாளர் ஐஸ்பிரீத் பும்ரா டெஸ்ட் கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவர் கேப்டன் பதவியில் இருக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் டெஸ்ட் கேப்டன் பதவிக்கான போட்டியில் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறதாக கூறப்படுகிறது. இதில் சுப்மன் கில்லுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.