இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு சப்மன் கில் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து நேற்று விமான மூலம் இங்கிலாந்துக்கு புறப்பட்டது. இதில் இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் போட்டி லீட்சில் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

ரோகித் சர்மா மற்றும் விராத் கோலி ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி வெளிநாட்டிற்கு சென்று விளையாடும் முதல் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து செல்வதற்காக விமான நிலையம் வந்த ரிஷப் பண்டிடம் ரசிகர் ஒருவர் ரோகித் சர்மா எங்கே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜாலியாக பதில் அளித்த அவர் ரோஹித் பாய் தோட்டத்தில் ஜாலியாக சுற்றித் திரிகிறார். அந்த தோட்டத்தை நானும் மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.