
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்ராயிச் அருகே முனிப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆலம் ஆரா(45). இவருக்கு திருமணம் ஆகி இஸ்மாயில் (10) என்ற மகன் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவநாளன்று இரவு இஸ்மாயில் வீட்டில் உள்ள டேபிள் பேனை போடுவதற்காக சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது ஃபேனில் மின்சார கசிவு ஏற்பட்டு இஸ்மாயில் மீது மின்சாரம் தாக்கியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாய் மகனை காப்பாற்றுவதற்காக முயற்சித்துள்ளார். அப்போது தாயின் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.