
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியின் அருகே சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறினார்.
இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இரு சக்கர வாகனத்தை அடையாளம் கண்டனர். அதன் பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது வாலிபர் அடையாளம் கண்டுள்ளதாகவும் இதுகுறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை எந்த சமூக வலைதளத்திலும் வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.