இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் காரில் சென்றுள்ளார். அப்போது சிங்கம் ஒன்று அவரை துரத்தி வந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் காரில் இருந்து இறங்கி மரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளார். அவரை அந்த சிங்கம் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் அந்த வாலிபர் பயந்து போய் மரத்தின் மேல் அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் திரும்பி பார்த்தபோது அவரது பின்னால் பாம்பு ஒன்று அவரை நோக்கி வந்தது. இதனை பார்த்ததும் அவர் மீண்டும் அதிர்ச்சி அடைந்து பயத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.